ௐம் ஸ்ரீகுருப்யோ நம:
ओम् श्रीगुरुब्यो नमः
मातृ पितृ वन्दनम्‌
மாத் பித் வந்நம்
தாய்‌ தந்தை வழிபாடு
தொகுத்தவர்‌:
ப்ரஹ்மசாரீ ஸநாதந சைதந்ய
வெளியீடு: ஸ்ரீப்ரஜ்ஞா பப்ளிகேஷன்ஸ்‌
வேதபுரீ, தேனி-525 531.
நூலின்‌ தலைப்பு : மாத் பித் வந்நம்
நூலின்‌ அளவு : 1/8 டெம்மி சைஸ்‌
மொத்த பக்கங்கள்‌ : 24
முதற்பதிப்பாண்டு : ஸ்ரீசார்வரி, தை, 2021
புத்தக வடிவமைப்பு : ஆ. சுந்தரராஜன்‌
மின்‌ பதிப்பு.
பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள்‌ தாயாருடன்‌
மங்கலகரமான ஸ்ரீசார்வரி வருஷம்‌, தை மாதம்‌ 18 ஆம்‌ நாள்‌, ஞாயிற்றுக்கிழமை (31.01.2021)
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகளின்‌ வார்ஷிக ஜந்மதின மஹோத்ஸவ தினத்தன்று வெளியிடப்பட்டது.
அருளாசியுரை
வேதநெநெறியைப்‌ பின்பற்றுகின்ற தெய்வீகமான வாழ்க்கைமுறையாகிய பாரதப்‌ பண்பாட்டில்‌ தாய்‌, தந்த, குரு வழிபாடு முக்கிய இடம்பெறுகிறது.
எந்த வழிபாட்டைத்‌ தொடங்குவதற்கு முன்னரும்‌ தாய்‌-தந்தை-குருவைப்‌ போற்றி வணங்குதல்‌ மரபு.
மாத்ரு தேவோபவ। பித்ருதேவோபவ।
ஆசார்ய தேவோ பவ। அதிதி தேவோ பவ।
என்பது வேதத்தின்‌ கட்டளை.
இதன்‌ பொருள்‌ : தாயை, தந்தையை, குருவை, விருந்தினரை தெய்வமாக உடையவனாக இருப்பாயாக என்பதாகும்‌.
வருடத்திற்கொரு முறை அன்னையர்‌ தினம்‌, தந்தையர்‌ தினம்‌ கொண்டாடுவது நம்‌ பண்பாட்டில்‌ இல்லை. நமக்கு ஒவ்வொரு நாளும்‌ அன்னையர்‌ தினம்‌, தந்தையர்‌ தினம்தான்‌.
பகவான்‌ மநு மஹரிஷி, மநு ஸ்ம்ருதியின்‌ இரண்டாவது அத்தியாயத்தில்‌ தாய்‌-தந்தை-ஆசார்யர்‌ ஆகியோரை வழிபடுவதைக்‌ குறித்துப்‌ பல கோணங்களில்‌ ஆழமாக உபதேசித்தருளியுள்ளார்‌.
तयोर्नित्यं प्रियं कुर्यादाचार्यस्य च सर्वदा ।
तेष्वेव त्रिषु तुष्टेषु तपः सर्वं समाप्यते ।।
தயோர்நித்யம் ப்ரியம் குர்யாதாசார்யஸ்ய ச ஸர்வதா
தேஷ்வேவ த்ரிஷு துஷ்டேஷு தப: ஸர்வம் ஸமாப்யதே ॥
(மநு ஸ்ம்ருதி 2 - 228)
தாய்தந்தையரிடத்திலும்‌ ஆசார்யரிடத்திலும்‌ நாள்தோறும்‌ எப்பொழுதும்‌ அன்பை வெளிப்படுத்த வேண்டும்‌. அவர்கள்‌ மூவரும்‌ மகிழ்ந்தார்கள்‌ எனில்‌, ஒருவனது அனைத்துத்‌ தவங்களும்‌ உடனடியாக நிறைவடைகின்றன. (சிறந்த பயன்களைத்‌ தருகின்றன என்பது கருத்து).
ब्राहो मुहूर्ते उत्थाय चिन्तयेदात्मनो हितम्‌।
गुरुं विष्णुं नमस्कृत्य मातापित्रोस्तथैव च।।
ப்ராஹ்மே முஹூர்தே உத்தாய சிந்தயேதாத்மநோ ஹிதம்।
குரும் விஷ்ணும் நமஸ்க்த்ய மாதாபித்ரோஸ்ததைவ ச॥
என்று செளநக ரிஷி உபதேசித்துள்ளார்‌.
பெருவாயில்‌ முள்ளியார்‌ என்ற புலவர்‌, ஆசாரக்‌ கோவை என்ற பழந்தமிழ்‌ நூலில்‌ -
வைகறை யாமம்‌ துயிலெழுந்து, தான்‌ செய்யும்‌
நல்‌அறமும்‌ ஒண்பொருளும்‌ சிந்தித்து, வாய்வதின்‌
தந்தையும்‌ தாயும்‌ தொழுதுஎழுக என்பதே
முந்தையோர்‌ கண்ட முறை
என்று உபதேசித்துள்ளார்‌.
இரவுப்பொழுது நிறைவுபெறும்‌ வேளையில்‌ உறக்கத்தினின்று விழித்தெழுந்து மனமார நன்றியுணர்வுடன்‌ தாயையும்‌ தந்தையையும்‌ குருவையும்‌ மனதால்‌ வணங்கி, அன்று செய்ய வேண்டிய நல்‌அறச்செயல்களையும்‌, மேலான பரம்பொருளையும்‌ (அல்லது அறவழியில்‌ பொருளீட்டுவதற்கான வழிமுறைகளையும்‌) நன்கு சிந்தித்து அதற்கேற்ற வண்ணம்‌ செயல்புரிய வேண்டும்‌ என்பதுதான்‌ அறிவும்‌ ஒழுக்கமும்‌ மிக்க நமது முன்னோர்கள்‌ கண்டுணர்ந்த வாழ்க்கைமுறையாகும்‌.
நாள்தோறும்‌ தாயையும்‌ தந்தையையும்‌ குருவையும்‌ போற்றி வணங்குவதால்‌ ஒருவர்‌ கண்ணுக்குத்‌ தெரியாத, மிக நுண்மையான தெய்வீக ஆற்றல்களைப்‌ பெறுகிறார்‌.
தாய்‌-தந்தையருக்குப்‌ பூஜை செய்யும்‌ வழிபாட்டுமுறையை, நமது பேரன்புக்குரிய சீடரான ப்ரஹ்மசாரீ ஸநாதந சைதந்ய அவர்கள்‌ தொகுத்துள்ளார்‌. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும்‌ வாழ்த்துகளையும்‌ தெரிவித்து மகிழ்கிறேன்‌! இந்நூலில்‌ கூறப்பட்டுள்ள வழிமுறைப்படி தாய்‌-தந்தையர்‌ வழிபாட்டினைச்‌ செய்ய முற்படும்‌ அனைத்து மெய்யன்பர்களுக்கும்‌ குழந்தைகளுக்கும்‌ எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத்‌ தெரிவித்து மகிழ்கிறேன்‌.
பேரன்புடன்‌,
(ஸ்வாமீ ஓங்காராநந்த)
கணபதி த்யாநம்
மாத் பித் வந்நம்
மாத்தேவோ வ। பித்தேவோ வ ।
ணபதித்யாநம்
ओं शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम्‌ ।
प्रसन्नवदनं ध्यायेत्‌ सर्वविघ्नोपशान्तये ।।
ஓம் ஶுக்லாம்ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் ।
ப்ரஸந்நவநம் த்யாயேத் ஸர்வவிக்நோபஶாந்தயே ॥
வெண்மையான (தூய்மையான) ஆடை தரித்தவரும்‌, எங்கும்‌ நிறைந்திருப்பவரும்‌, வெண்மதியைப்‌ போன்ற நிறமுடையவரும்‌, நான்கு கரங்கள்‌ உடையவரும்‌, புன்சிரிப்புடன்‌ கூடிய மலர்ந்த முகத்தை உடையவருமான பகவானை நமது துயர்களைத்‌ தீர்க்க தியானிப்போம்‌.
सङ्कल्पः ஸங்கல்ப:
ममोपात्त समस्त दुरितक्षयद्वारा श्रीपरमेश्वरप्रीत्यर्थ श्रीमातृपितृ -पादपूजनद्वारा
श्रीपार्वतीपरमेश्वर-प्रसादसिद्ध्यर्थम्‌ आयुर्विद्यायशोबल -ऐश्वर्य-अभिवृद्ध्यर्थं
सद्रुणसंपत्‌-अभिवृद्ध्यर्थं ‌, आलस्यरहित -तन्द्रारहित - परिपूर्ण -उत्साह- अभिवृद्ध्यर्थं,
सर्वमङ्गल-अवाप्त्यर्थं श्रीमातुपितृपादपूजां करिष्ये ।
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீபரமேஶ்வரப்ரீத்யர் ஶ்ரீமாத்பித் -பாபூஜநத்வாரா
ஶ்ரீபார்வதீபரமேஶ்வர-ப்ரஸாஸித்த்யர்ம் ஆயுர்வித்யாயஶோல -ஐஶ்வர்ய-அபிவ்த்த்யர்ம்
த்ருணஸம்பத்-அபிவ்த்த்யர்ம் , ஆலஸ்யரஹித -தந்த்ராரஹித - பரிபூர்ண -உத்ஸாஹ- அபிவ்த்த்யர்ம்,
ஸர்வமங்ல-அவாப்த்யர்ம் ஶ்ரீமாதுபித்பாபூஜாம் கரிஷ்யே ।
என்னிடத்தில்‌ உள்ள அனைத்துப்‌ பாபங்கள்‌ நீங்குவதன்‌ வாயிலாக, பரமேச்வரனை மகிழச்‌ செய்யும்பொருட்டு, தாய்‌-தந்தையரின்‌ திருவடிகளில்‌ வழிபாடு செய்வதன்‌ வாயிலாக, பார்வதீ பரமேச்வரர்களின்‌ திருவருளைப்‌ பெறும்பொருட்டு, ஆயுள்‌, கல்வி, புகழ்‌, வலிமை, ஆளுந்திறன்‌ ஆகியவை வளரும்பொருட்டும்‌, நற்பண்புகள்‌ என்னிடத்தில்‌ மேலோங்கி வளரவும்‌, சோம்பலும்‌ கவனக்குறைவும்‌ இல்லாத முழுமையான உற்சாகம்‌ என்னிடத்தில்‌ வளரவும்‌, அனைத்து நலன்களைப்‌ பெறவும்‌ தாய்‌-தந்தையரின்‌ திருவடிகளை வழிபடுகிறோம்‌.
आवाहनम्‌ ஆவாஹநம்‌
वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये ।
जगतः पितरौ बन्दे पार्वतीपरमेश्वरौ ।।
வார்தாவிவ ஸம்ப்க்தௌ வார்ப்ரதிபத்தயே ।
த: பிதரௌ ந்தே பார்வதீபரமேஶ்வரௌ ॥
சொல்லும்‌ பொருளும்‌ போல்‌ இணைந்திருப்பவர்களும்‌, உலகங்களுக்கெல்லாம்‌ தாய்‌ தந்தையருமான பார்வதி - பரமேச்வரர்களைச்‌ சொல்‌ பொருள்‌ ஆகியவைப்‌ பற்றிய அறிவு உண்டாகும்‌ பொருட்டு வணங்குகிறேன்‌.
पिता माता च भगवान्नेतौ मे दैवतं परम्‌ ।
यदैवतेभ्यः कर्तव्यं तदेताभ्यां करोम्यहम्‌ ।।
பிதா மாதா ச வாந்நேதௌ மே தைவதம் பரம் ।
தைவதேப்ய: கர்தவ்யம் ததேதாப்யாம் கரோம்யஹம் ॥
எனது பெற்றோர்களே நான்‌ வணங்கும்‌ தெய்வங்களாகும்‌. தேவர்களுக்கு என்னவெல்லாம்‌ செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும்‌ நான்‌ இவர்களுக்குச்‌ செய்கிறேன்‌.
पार्वतीपरमेश्वररूप-मातापितृभ्यां नमः।
मातापितृचरणकमलेभ्यो नमः।।
பார்வதீபரமேஶ்வரரூப-மாதாபித்ப்யாம் நம:।
மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
आवाहयामि। ஆவாஹயாமி
आसनम्‌ ஆஸநம்‌
आसने स्थापिते ह्यत्र पूजार्थं भवतोरिह ।
भवन्तौ संस्थितौ तातौ पूर्यतां मे मनोरथः ।।
ஆஸநே ஸ்தாபிதே ஹ்யத்ர பூஜார்ம் வதோரிஹ ।
வந்தௌ ஸம்ஸ்திதௌ தாதௌ பூர்யதாம் மே மநோர: ॥
பாத பூஜையின்‌ பொருட்டு இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆஸநத்தில்‌ இப்பொழுது நீங்களிருவரும்‌ (தாய்தந்தையர்‌ இருவரும்‌) வீற்றிருந்து என்‌ மநோரதத்தைப்‌ பூர்த்தி செய்யவேண்டும்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः।।
மாதாபித்ருசரணகமலேப்யோ நம: ।
आसनं समर्पयामि। ஆஸநம்‌ ஸமர்ப்பயாமி।
पाद्यम्‌ பாத்யம்‌
मातापित्रोस्तु यः पादौ नित्यं प्रक्षालयेत्‌ सुतः |
तस्य भागीरथीस्नानं अहन्यहनि जायते ॥
மாதாபித்ரோஸ்து ய: பாதௌ நித்யம் ப்ரக்ஷாலயேத் ஸுத: ।
தஸ்ய பாகீதீஸ்நாநம் அஹந்யஹநி ஜாயதே ॥
எந்த மகனானவன்‌ தினந்தோறும்‌ தாய்‌ தந்தையரின்‌ பாதங்களைக்‌ கழுவுகிறானோ, அது அவனுக்குத்‌ தினந்தோறும்‌ பாகீரதி (கங்கா) ஸ்நாநம்‌ செய்த பலனைத்‌ தருகிறது.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
पाद्यं समर्पयामि ।‌ பாத்யம்‌ ஸமர்ப்பயாமி।
अर्ध्यम्‌। அர்க்யம்‌
देवतानां समावायमेकस्थं पितरं विदुः।
मर्त्यानां देवतानां च स्नेहादभ्येति मातरम्‌।।
தேவதாநாம் ஸமாவாயமேகஸ்ம் பிதரம் விது:।
மர்த்யாநாம் தேவதாநாம் ச ஸ்நேஹாப்யேதி மாதரம்॥
தந்தையோ தேவர்கள்‌ அனைவரின்‌ கலவையாக அறியப்பட வேண்டியவர்‌. எனினும்‌ தாயானவள்‌, உயிரினங்கள்‌ மற்றும்‌ அனைத்துத்‌ தேவர்களின்‌ கலவையாக இருக்கிறாள்‌. தந்தையை மதிப்பதால்‌ தேவர்கள்‌ அனைவரும்‌ நிறைவடைகிறார்கள்‌ என்பதால்‌, தந்தையே அனைத்து தேவர்களும்‌ ஆவார்‌. எனினும்‌ தாயை நிறைவடையச்‌ செய்வதால்‌ ஒருவன்‌ இம்மையிலும்‌ மறுமையிலும்‌ நிச்சயம்‌ வெற்றியை அடைவதால்‌, அவள்‌ அழியத்தக்க மற்றும்‌ அழிவில்லாத உயிரினங்களின்‌ (தேவர்களின்‌ கலவையாவாள்‌).
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
अर्घ्यं समर्पयामि। அர்க்யம்‌ ஸமர்ப்பயாமி
आचमनीयम्‌ । ஆசமநீயம்‌
पुत्रस्य च महत्तीर्थं पित्रोश्चरणपङ्कजम्‌ ।
अन्यतीर्थं च दूरे वै गत्वा सम्प्राप्यते पुनः ।।
புத்ரஸ்ய ச மஹத்தீர்ம் பித்ரோஶ்சரணபங்கஜம் ।
அந்யதீர்ம் ச தூரே வை த்வா ஸம்ப்ராப்யதே புந: ॥
புத்ரனுடைய மேலான தீர்த்தம்‌ என்பது, வீட்டில்‌ இருக்கும்‌ தாய்தந்தையரின்‌ திருவடித்‌ தாமரைகளே ஆகும்‌. மற்ற தீர்த்தங்களெல்லாம்‌ தூரத்தில்‌ சென்று அடையப்படுகிறது.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
आचमनीयं समर्पयामि| ஆசமநீயம்‌ ஸமர்ப்பயாமி |
मधुपर्कम्‌ । - மதுபர்கம்‌
इदं सन्निहितं तीर्थं सुलभं धर्मसाधनम्‌ ।
पुत्रस्य च स्रियोश्चैव तीर्थं गेहे सुशोभनम्‌ ।।
ம் ஸந்நிஹிதம் தீர்ம் ஸுலம் ர்மஸாநம் ।
புத்ரஸ்ய ச ஸ்ரியோஶ்சைவ தீர்ம் கேஹே ஸுஶோநம் ॥
புத்ரனுடைய மேலான தீர்த்தமாகிய தாய்தந்தையரின்‌ பாத தாமரைகள்‌ தர்மஸாதநமாகும்‌. அது புத்ரனுக்கும்‌, பெண்களுக்கும்‌ மிக அருகிலிருப்பதும்‌, வீட்டிலேயே எளிதில்‌ அடையக்கூடியதும்‌, சுபத்தை அளிக்கக்கூடியதுமான மேலானதீர்த்தமாகும்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
मधुपर्कं समर्पयामि। மதுபர்கம்‌ ஸமர்ப்பயாமி |
स्तानम्‌ - ஸ்நாநம்‌
पिता ह्यात्मानमाधत्ते जायायां जायतामिति ।
शीलचारित्रगोत्रस्य धारणार्थं कुलस्य च ।।
பிதா ஹ்யாத்மாநமாத்தே ஜாயாயாம் ஜாயதாமிதி ।
ஶீலசாரித்ரகோத்ரஸ்ய தாரணார்ம் குலஸ்ய ச ॥
( மஹாபாரதம்‌ : 12-272-14 )
தந்தையானவர்‌, தமது நடைமுறைகள்‌ (சீலம்‌), ஒழுக்கம்‌ (ஆசாரம்‌), பெயர்‌ (கோத்ரம்‌) மற்றும்‌ குலம்‌ ஆகியவற்றைத்‌ தொடர்வதற்காகத்‌ தாயின்‌ கருவறையில்‌ தம்மையே வைத்து மகனாகப்‌ பிறக்கிறார்‌.
स्वयं च स्नापयाम्येतौ तथा पादौ प्रधावये ।
आहारं च प्रयच्छामि स्वयश्च द्विजसत्तम ।।
ஸ்வயம் ச ஸ்நாபயாம்யேதௌ ததா பாதௌ ப்ரதாவயே ।
ஆஹாரம் ச ப்ரயச்சாமி ஸ்வயஶ்ச த்விஜஸத்தம ॥
( மஹாபாரதம்‌ : 3-217-25 )
ஓ! நல்ல அந்தணரே, அவர்கள்‌ குளிப்பதற்கும்‌, கால்‌ கழுவுவதற்கும்‌, உணவு உண்பதற்கும்‌, நான்‌ எனது கைகளால்‌ அவர்களுக்கு உதவுகிறேன்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
स्नानं समर्पयामि। ஸ்நாநம்‌ ஸமர்ப்பயாமி स्नानानन्तरम्‌ आचमनीयं समर्पयामि। ஸ்நாநாநந்தரம்‌ ஆசமநீயம்‌ ஸமர்ப்பயாமி |
वस्नम्‌ - வஸ்த்ரம்‌
यथाशक्ति प्रदानेन स्वापनोच्छादनेन च ।
नित्यं च प्रियवादेन तथा संवर्धनेन च ॥
தாஶக்தி ப்ரதாநேந ஸ்வாபநோச்சாநேந ச ।
நித்யம் ச ப்ரியவாதேந ததா ஸம்வர்நேந ச ॥।
( ஸ்ரீமத்‌ வால்மீகி இராமாயணம்‌: 2.111.10 )
यन्मातापितरौ वृत्तं तनये कुरुतः सदा ।
न सुप्रतिकरं तत्तु मात्रा पित्रा च यत्कृतम्‌ ।।
யந்மாதாபிதரௌ வ்த்தம் தநயே குருத: ஸதா
ந ஸுப்ரதிகரம் தத்து மாத்ரா பித்ரா ச யத்க்தம் ॥
(ஸ்ரீமத்‌ வால்மீகி இராமாயணம்‌: 2.111.11)
தங்களது ஸக்திக்கேற்றவாறு பால்‌ கொடுத்து அந்நமிட்டு,நீராட்டி, ஆடையாபரணம்‌ கொடுத்து, ப்ரியத்துடன்‌ பேசி, மிகுந்த கவலையுடன்‌ ஒவ்வொரு நாளும்‌ புத்ரனை வளர்ப்பதால்‌ அவர்கள்‌ செய்யும்‌ உபகாரத்திற்கு புத்ரன்‌ எவ்வளவு ஜந்மங்கள்‌ எடுத்தாலும்‌ பதில்‌ உபகாரம்‌ செய்வது ஸாத்தியமல்ல.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
वसरं समर्पयामि| வஸ்த்ரம்‌ ஸமர்ப்பயாமி
भस्म - பஸ்ம
अभिवादनशीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम्‌ ||
பிவாநஶீலஸ்ய நித்யம் வ்த்தோபஸேவிந: ।
சத்வாரி தஸ்ய வர்ந்தே ஆயுர்வித்யா யஶோ லம் ॥
நாள்தோறும்‌ பெரியோர்களுக்கு அபிவாதனம்‌ செய்யும்‌ வழக்க முடையவனுக்கும்‌, பெரியோர்களை ஸேவிப்பவனுக்கும்‌ ஆயுள்‌, அறிவு, புகழ்‌, பலம்‌ இந்நான்கும்‌ வ்ருத்தியடைகின்றன.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
भस्मं समर्पयामि| பஸ்மம்‌ ஸமர்ப்பயாமி
गन्धः கந்த:
एतावेवाग्नयो महयं यान्वदन्ति मनीषिणः ।
यज्ञा वेदाश्च चत्वारः सर्वमेतौ मम द्विज ।।
ஏதாவேவாக்நயோ மஹயம் யாந்வந்தி மநீஷிண: ।
யஜ்ஞா வேதாஶ்ச சத்வார: ஸர்வமேதௌ மம த்விஜ ॥
(மஹாபாரதம்‌: 3-217-23)
கற்றவர்களால்‌ சொல்லப்படும்‌ மூன்று புனிதமான நெருப்புகளும்‌ எனக்கு இவர்களே! ஓ அந்தணரே! அவர்கள்‌ எனக்கு வேள்விகளைப்‌ போலவும்‌, நான்கு வேதங்களைப்‌ போலவும்‌ நன்மையானவர்களாகத்‌ தெரிகிறார்கள்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
गन्धान्‌ धारयामि। கந்தாந்‌ தாரயாமி।
कुङ्कुमम्‌ - குங்குமம்‌‌
मातापितृभ्यां वपुषः जनकाभ्यां मुदान्वहम्‌ ।
नमस्करोमि विज्ञानजनकाभ्यां शिवाप्तये ।।
மாதாபித்ப்யாம் வபுஷ: ஜநகாப்யாம் முதாந்வஹம் ।
நமஸ்கரோமி விஜ்ஞாநஜநகாப்யாம் ஶிவாப்தயே ॥
உடலையும்‌ அறிவையும்‌ கொடுத்த தாய்தந்தையரை தினந்தோறும்‌ மகிழ்ச்சியுடன்‌ மங்களத்தின்பொருட்டு வணங்குகிறேன்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
कुङ्कुमं समर्पयामि। குங்குமம்‌ ஸமர்ப்பயாமி।
अक्षताः - அக்ஷதா:
उपाहारनाहरन्तो देवतानां यथा द्विजः ।
कुर्वन्ति तद्वदेताभ्यां करोम्यहमतन्द्रितः ।।
உபாஹாரநாஹரந்தோ தேவதாநாம் யதா த்விஜ: ।
குர்வந்தி தத்தேதாப்யாம் கரோம்யஹமதந்த்ரித: ॥
( மஹாபாரதம்‌: 3-217-21 )
தேவர்களுக்குக்‌ காணிக்கைகளைப்‌ பெற அந்தணர்கள்‌ முயற்சிப்பதைப்‌ போன்று, நானும்‌ இந்த இருவருக்காகவும்‌ விடாமுயற்சியுடன்‌ செயல்படுகிறேன்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
अक्षतान्‌ समर्पयामि।‌ அக்ஷதாந்‌ ஸமர்ப்பயாமி
पुष्पमाला - புஷ்பமாலா
सर्वतीर्थमयी माता सर्वदेवमयः पिता।
मातरं पितरं तस्मात्‌ सर्वयत्नेन पूजयेत्‌।
ஸர்வதீர்மயீ மாதா ஸர்வதேவமய: பிதா।
மாதரம் பிதரம் தஸ்மாத் ஸர்வயத்நேந பூஜயேத்।
அனைத்துத்‌ தீர்த்தங்களின்‌ வடிவமாகவும்‌ இருப்பவள்‌ தாய்‌. அனைத்துத்‌ தெய்வங்களின்‌ வடிவமாகவும்‌ இருப்பவர்‌ தந்தை. ஆகையால்‌ ஒருவன்‌ தாயையும்‌ தந்தையையும்‌ எல்லா வழிகளிலும்‌ முயன்று வழிபட வேண்டும்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
पुष्पमालां समर्पयामि। पुष्पैः संपूजयामि। புஷ்பமாலாம்‌ ஸமர்ப்பயாமி। புஷ்பை: ஸம்பூஜயாமி।
अर्चना அர்சநா
ॐ पित्रे नमः। मात्रे नमः। जन्मदात्रे नमः। सर्वदेवमयाय नमः। सुखदाय नमः
प्रसन्नाय नमः। सुप्रीताय नमः। महात्मने नमः। सर्वयज्ञस्वरूपाय नमः।
स्वर्गाय नमः। परमेष्ठिने नमः। सर्वतीर्थावलोकाय नमः। करुणासागराय नमः।
सदाऽऽशुतोषाय नमः। शिवरूपाय नमः। सदाऽपराधक्षमिणे नमः।
सुखाय नमः। सुखदाय नमः। महागुरोश्च गुरवे नमः।।
0950 பித்ரே நம:। மாத்ரே நம:। ஜந்மதாத்ரே நம:। ஸர்வதேவமயாய நம:। ஸுதா
நம:, ப்ரஸந்நாய நம:। ஸுப்ரீதாய நம:। மஹாத்மநே நம:। ஸர்வயஜ்ஞஸ்வரூபாய நம:।
ஸ்வர்காய நம:। பரமேஷ்டிநே நம:। ஸர்வதீர்தாவலோகாய நம:। கருணாஸாராய
நம:। ஸதா(அ)(அ)ஶுதோஷாய நம:। ஶிவரூபாய நம:। ஸதா(அ)பராக்ஷமிணே நம:।
ஸுகாய நம:। ஸுதாய நம:। மஹாகுரோஶ்ச குரவே நம:॥
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
नामपूजान्समर्पयामि।‌
நாமபூஜாந்‌ ஸமர்ப்பயாமி।
धूपः - தூப:
उपाध्यायान्दशाचार्य आचार्याणां शतं पिता।
सहस्रं तु पितॄन् माता गौरवेणातिरिच्यते।।
உபாத்யாயாந்ஶாசார்ய ஆசார்யாணாம் ஶதம் பிதா।
ஸஹஸ்ரம் து பித்ரூந் மாதா கௌரவேணாதிரிச்யதே॥
( மநுஸ்ம்ருதி 2-145 )
உபாத்யாயரைவிட ஆசார்யர்‌ பத்து மடங்கும்‌, அவரை விட தனக்கு உபநயநம்‌ செய்வித்த தந்‌தை நூறு மடங்கும்‌, அவரைவிடத்‌ தாய்‌ தனது தாய்மையால்‌ ஆயிரம்‌ மடங்கும்‌ உயர்ந்தவர்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
धूपम्‌ आघ्रापयामि। தூபம்‌ ஆக்ராபயாமி
दीपः - தீப:
त्रयस्त्रिंशद्यथा देवाः सर्वेशक्रपुरोगमाः।
संपूज्याः सर्वलोकस्य तथा वृद्धाविमौ मम।।
த்ரயஸ்த்ரிம்ஶத்தா தேவா: ஸர்வேஶக்ரபுரோமா:।
ஸம்பூஜ்யா: ஸர்வலோகஸ்ய ததா வ்த்தாவிமௌ மம॥
( மஹாபாரதம்‌ 3-217-20 )
இந்த்ரனைத்‌ தலைமையாகக்‌ கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்‌ மனிதர்களால்‌ வழிபடப்படுவதைப்போன்று, இந்த எனது வயது முதிர்ந்த பெற்றோர்‌ என்னால்‌ வழிபடப்படுகின்றனர்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
दीपं दर्शयामि। தீபம்‌ தர்ஶயாமி
नैवेद्यम्‌ நைவேத்யம்‌
एतौ मे परमं ब्रह्मन्यिता माता च दैवतम्‌।
एतौ पुष्पैः फलैरन्नैस्तोषयामि सदा द्विज।।
ஏதௌ மே பரமம் ப்ரஹ்மந்யிதா மாதா ச தைவதம்।
ஏதௌ புஷ்பை: ஃபலைரந்நைஸ்தோஷயாமி ஸதா த்விஜ॥
( மஹாபாரதம்‌ 3-217-22 )
ஓ அந்தணரே! (கெளசிகரே!) இந்த எனது தாயும்‌ தந்தையுமே எனது தலைமைத்‌ தெய்வங்கள்‌. நான்‌ அவர்களுக்கு மலர்களையும்‌ கனிகளையும்‌ ரத்தினங்களையும்‌ காணிக்கையாகக்‌ கொடுத்து, அவர்களை எப்போதும்‌ திருப்தி செய்ய முயல்கிறேன்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
नैवेद्यं निवेदयामि। आचमनीयं समर्पयामि।
நைவேத்யம்‌ நிவேதயாமி। ஆசமநீயம்‌ ஸமர்ப்பயாமி।
कर्पूरनीराजनम्‌ கர்ப்பூரநீராஜநம்‌
तीर्थं स्नान तपो होम जपादि यस्य दर्शनम्‌।
महागुरोश्च गुरवे तस्मे पित्रे नमो नमः।।
தீர்ம் ஸ்நாந தபோ ஹோம ஜபாதி யஸ்ய ர்ஶநம்।
மஹாகுரோஶ்ச குரவே தஸ்மே பித்ரே நமோ நம:॥
தீர்த்த ஸ்நாநம்‌, தபஸ்‌, ஹோமம்‌, ஜபம்‌ முதலியன செய்வதன்‌ பலன்கள்‌ எல்லாம்‌ எவரைக்‌ கண்டாலே கிடைக்குமோ, மஹாகுருவைவிட மேலான அந்த குருவாகிய தந்தைக்கு நமஸ்காரம்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः||
மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
कर्पूरनीराजनं दर्शयामि | கர்ப்பூர நீராஜநம்‌ தர்ஶயாமி
पुष्पाञ्जलिः புஷ்பாஞ்ஜலி
मुच्यते बन्धनात्‌ पुष्पं फलं वृक्षान्प्रमुच्यते।
क्लिश्यन्नपि सुतस्नेहैः पिता पुत्रं न मुञ्चति।।
முச்யதே ந்நாத் புஷ்பம் ஃபலம் வ்க்ஷாந்ப்ரமுச்யதே।
க்லிஶ்யந்நபி ஸுதஸ்நேஹை: பிதா புத்ரம் ந முஞ்சதி॥
( மஹாபாரதம்‌ : 12 - 272 - 23 )
தண்டிலிருந்து மலர்‌ விழுவது காணப்படுகிறது. மரத்திலிருந்து கனி விழுவது காணப்படுகிறது. ஆனால்‌ எத்துயரத்திலும்‌, தந்தையானவர்‌, பெற்ற பாசத்தினால்‌, மகனைக்‌ கைவிடமாட்டார்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः||
மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
पुष्पाञ्जलिं समर्पयामि। புஷ்பாஞ்ஜலிம்‌ ஸமர்ப்பயாமி
स्तोत्रम्‌ - ஸ்தோத்ரம்‌
प्रीतिमात्रं पितुः पुत्रः सर्वं पुत्रस्य वै पिता।
शरीरादीनि देयानि पिता त्वेकः प्रयच्छति।।
ப்ரீதிமாத்ரம் பிது: புத்ர: ஸர்வம் புத்ரஸ்ய வை பிதா।
ஶரீராதீநி தேயாநி பிதா த்வேக: ப்ரயச்தி॥
( மஹாபாரதம்‌ : 12 - 272 - 18 )
தந்தைக்கு மகன்‌ மட்டுமே இன்பத்தின்‌ ஊற்றுக்கண்ணாவான்‌. எனினும்‌ மகனுக்கோ அத்தந்தையே அனைத்துமாவார்‌. மகன்‌ கொண்ட உடலையும்‌, வேறு அனைத்தையும்‌ கொடுத்தவர்‌ தந்தையே ஆவார்‌.
तस्मात्‌ पितुर्वचः कार्यं न विचार्यं कदाचन।
पातकान्यपि पूयन्ते पितुःशासनकारिणः।।
தஸ்மாத் பிதுர்வச: கார்யம் ந விசார்யம் கதாசந।
பாதகாந்யபி பூயந்தே பிது:ஶாஸநகாரிண:॥
(மஹாபாரதம்‌ : 12- 272- 19)
எனவே, ஒருபோதும்‌ சிறுகேள்வியேனும்‌ கேட்காமல்‌ அவரது கட்டளைகள்‌ அனைத்திற்கும்‌ கீழ்ப்படிய வேண்டும்‌. தன்‌ தந்தைக்குக்‌ கீழ்ப்படிபவனது பாபங்கள்‌, (அத்தகைய கீழ்ப்படிதலால்‌) கழுவப்படுகின்றன.
पिता धर्मः पिता स्वर्गः पिता हि परमं तपः।
पितरि प्रीतिमापन्ने सर्वाः प्रीयन्ति देवताः।।
பிதா ர்ம: பிதா ஸ்வர்: பிதா ஹி பரமம் தப:।
பிதரி ப்ரீதிமாபந்நே ஸர்வா: ப்ரீயந்தி தேவதா:॥
(மஹாபாரதம்‌ : 12 - 272 - 21)
தந்தையே அறமாவார்‌. தந்தையே ஸ்வர்கமாவார்‌. தந்தையே உயர்ந்த தவமுமாவார்‌. தந்தை நிறைவடைந்தால்‌, தேவர்கள்‌ அனைவரும்‌ நிறைவடைகிறார்கள்‌.
आशिषस्ता भजन्त्येनं पुरुषं प्राह यत्पिता।
निष्कृतिः सर्वपापानां पिता यच्चाभिनन्दति।।
ஆஶிஷஸ்தா ஜந்த்யேநம் புருஷம் ப்ராஹ யத்பிதா।
நிஷ்க்தி: ஸர்வபாபாநாம் பிதா யச்சாபிநந்தி॥
(மஹாபாரதம்‌ - 12-272-22)
தந்தையால்‌ சொல்லப்படும்‌ எந்த வார்த்தைகளும்‌, மகனுக்கு ஆசிகளாகவே அமையும்‌. தந்தை மகிழ்ந்து சொல்லும்‌ வார்த்தைகள்‌ அவனது பாபங்கள்‌ அனைத்தையும்‌ கழுவிவிடும்‌.
यो ह्ययं मम संघातो मर्त्यत्वे पाश्चभौतिकः।
अस्य मे जननी हेतुः पावकस्य यथाऽरणिः।।
யோ ஹ்யயம் மம ஸங்காதோ மர்த்யத்வே பாஶ்சபௌதிக:।
அஸ்ய மே ஜநநீ ஹேது: பாவகஸ்ய யதா(அ)ரணி:॥
(மஹாபாரதம்‌ : 12 - 272 - 25)
நெருப்புக்குத்‌ தீக்குச்சிகளைப்போல, மனிதனாகப்‌ பிறந்த என்னில்‌ உள்ள இந்த ஐம்பூதக்கலவைக்குத்‌ தாயே முக்கிய காரணமாவாள்‌.
मातु देहारणिः पुंसां सर्वस्यार्तस्य निर्वृतिः।
मातृलाभे सनातत्त्वमनाथत्वं विपर्यये ।।
மாது தேஹாரணி: பும்ஸாம் ஸர்வஸ்யார்தஸ்ய நிர்வ்தி:।
மாத்லாபே ஸநாதத்த்வமநாத்வம் விபர்யயே ॥
(மஹாபாரதம்‌ : 12-272-26)
மனிதர்கள்‌ அனைவரின்‌ உடல்களைப்‌ பொறுத்தவரையில்‌, தாயே அரணிக்கட்டையாவாள்‌. அனைத்து வகைப்‌ பெருந்துயரங்களுக்கும்‌ அவளே மருந்தாவாள்‌. (ஸர்வரோக நிவாரணியாவாள்‌). தாயின்‌ இருப்பே ஒருவனைப்‌ பாதுகாக்கிறது (ஸநாதநன்‌ ஆக்குகிறது). அவளது இன்மை, அவனைப்‌ பாதுகாப்பு இழந்தவனாக, அநாதனாகச்‌ செய்கிறது.
न च शोचति नाप्येनं स्थाविर्यमपकर्षति।
श्रिया हीनोऽपि यो गेहमम्बेति प्रतिपद्यते।।
ந ச ஶோசதி நாப்யேநம் ஸ்தாவிர்யமபகர்ஷதி।
ஶ்ரியா ஹீநோ(அ)பி யோ கேஹமம்பேதி ப்ரதிபத்யதே॥
(மஹாபாரதம்‌ : 12-272-27)
ஒரு மனிதன்‌, தன்‌ செழிப்பை இழந்திருந்தாலும்‌, ஓ தாயே! (அம்மா) என்ற வார்த்தையைக்‌ கூறிக்கொண்டே வீட்டிற்குள்‌ நுழைந்தால்‌, அவன்‌ எத்துயரையும்‌ அடைய மாட்டான்‌. முதுமை அவனை அண்டுவதில்லை.
पुत्रपौत्रोपपन्नोपि जननीं यः समाश्रितः।
अपि वर्षशतस्यान्ते स द्विहायनवच्चरेत्‌।।
புத்ரபௌத்ரோபபந்நோபி ஜநநீம் ய: ஸமாஶ்ரித:।
அபி வர்ஷஶதஸ்யாந்தே ஸ த்விஹாயநவச்சரேத்॥
(மஹாபாரதம்‌ : 12-272-28)
ஒருவன்‌ மகன்களையும்‌ பேரப்பிள்ளைகளையும்‌ பெற்றிருந்தாலும்‌, அவனுக்கு நூறு வயதே ஆகியிருந்தாலும்‌, தாயிருப்பவன்‌ இரண்டு வயது குழந்தையைப்‌ போலவே தோன்றுவான்‌.
समर्थं वाऽसमर्थं वा कृशं वाप्यकृशं तथा।
रक्षत्येव सुतं माता नान्यः पोष्टा विधानतः।।
ஸமர்ம் வா(அ)ஸமர்ம் வா க்ஶம் வாப்யக்ஶம் ததா
ரக்ஷத்யேவ ஸுதம் மாதா நாந்ய: போஷ்டா விதாநத:॥
(மஹாபாரதம்‌ : 12-272-29)
மகனானவன்‌, திறமைபடைத்தவனாக இருப்பினும்‌, திறமையற்றவனாக இருப்பினும்‌, மெலிந்தவனாக இருப்பினும்‌, திடமானவனாக இருப்பினும்‌, தாயாரால்‌ எப்போதும்‌ பாதுகாக்கப்படுவான்‌. விதியின்படி (தாயைத்‌ தவிர) வேறு எவரும்‌ மகனின்‌ பாதுகாவலர்‌ ஆக முடியாது.
नास्ति मात्रा समं तीर्थं नास्ति मात्रा समा गतिः।
नास्ति मात्रा समं श्राणं नास्ति मात्रा समं प्रपा।।
நாஸ்தி மாத்ரா ஸமம் தீர்ம் நாஸ்தி மாத்ரா ஸமா தி:।
நாஸ்தி மாத்ரா ஸமம் ஶ்ராணம் நாஸ்தி மாத்ரா ஸமம் ப்ரபா॥
தாய்க்கு ஸமமான தீர்த்தம்‌ இல்லை, தாய்க்கு ஸமமான புகலிடம்‌ இல்லை. தாயைப்‌ போன்று இரக்கமுள்ளவர்‌ யாரும்‌ இல்லை, தாய்க்கு ஸமமான தண்ணீர்ப்பந்தல்‌ இல்லை.
नास्ति मातृसमा छाया नास्ति मातृसमा गतिः ।
नास्ति मातृसमं त्राणं नास्ति मातृसमा प्रिया ।
நாஸ்தி மாத்ஸமா சாயா நாஸ்தி மாத்ஸமா தி: ।
நாஸ்தி மாத்ஸமம் த்ராணம் நாஸ்தி மாத்ஸமா ப்ரியா ।
(மஹாபாரதம்‌ 12 - 272 - 31)
தாயைப்‌ போன்ற உறைவிடமேதும்‌ கிடையாது. தாயைப்‌ போன்ற புகலிடம்‌ வேறேதும்‌ கிடையாது. தாயைப்‌ போன்ற பாதுகாப்பு வேறேதும்‌ கிடையாது. தாயைப்‌ போன்று அன்புக்குரியவர்‌ வேறு யாரும்‌ கிடையாது.
कुक्षौ संधारणाद्धात्री जननाज्जननी स्मृता ।
अङ्गानां वर्धनादम्बा वीरसूत्वेन वीरसूः ।।
குக்ஷௌ ஸந்தாரணாத்தாத்ரீ ஜநநாஜ்ஜநநீ ஸ்ம்தா ।
அங்காநாம் வர்நாம்பா வீரஸூத்வேந வீரஸூ: ॥
(மஹாபாரதம்‌ 12 - 272 - 32)
மகனைத்‌ தன்‌ கருவறையில்‌ சுமப்பதால்‌ அவளே அவனின்‌ தாத்ரீயாவாள்‌. அவனுடைய பிறப்புக்கு மூல காரணமானதால்‌ அவளே அவனது ஜநநீ ஆவாள்‌. அவனது இளம்‌ அங்கங்களை வளரச்‌ செய்வதால்‌ அவள்‌ அம்பை என்றழைக்கப்படுகிறாள்‌.
ஒரு பிள்ளையை வீரத்துடன்‌ வளர்ப்பதால்‌ அவள்‌ வீரஸூ என்றழைக்கப்படுகிறாள்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
स्तोत्रं समर्पयामि। ஸ்தோத்ரம்‌ ஸமர்ப்பயாமி।
प्रदक्षिणम्‌ - ப்ரதக்ஷிணம்‌
पित्रोश्च पूजनं कृत्वा प्रकान्तिं च करोति यः।
तस्य वै पृथिवीजन्यफलं भवति निश्चितम्‌।।
பித்ரோஶ்ச பூஜநம் க்த்வா ப்ரகாந்திம் ச கரோதி ய:।
தஸ்ய வை ப்திவீஜந்யஃபலம் வதி நிஶ்சிதம்॥
எவன்‌ தாய்‌ தந்தையரை பூஜித்துவிட்டு, அவர்களை வலம்‌ வருகிறானோ, அவனுக்கு இந்தப்‌ பூமி முழுவதையும்‌ வலம்‌ வந்த பலன்‌ நிச்சயமாகக்‌ கிடைக்கிறது.
मातरं पितरं चैव यस्तु कुर्यात्‌ प्रदक्षिणम्‌ ।
प्रदक्षिणीकृता तेन सप्तद्वीपा वसुन्धरा ।।
மாதரம் பிதரம் சைவ யஸ்து குர்யாத் ப்ரக்ஷிணம் ।
ப்ரக்ஷிணீக்தா தேந ஸப்தத்வீபா வஸுந்ரா ॥
தாயையும்‌ தந்தையையும்‌ எவன்‌ ப்ரதக்ஷிணம்‌ செய்கிறானோ, அவனால்‌ ஏழுதீவுகள்‌ உள்ள இந்த பூமி முழுமையும்‌ ப்ரதக்ஷிணம்‌ செய்யப்பட்டது.
भूप्रदक्षिणषट्केन काशीयात्रायुतेन च ।
सेतुस्नानशतैर्यच्च तत्फलं मातृबन्दने ।।
பூப்ரக்ஷிணஷட்கேந காஶீயாத்ராயுதேந ச ।
ஸேதுஸ்நாநஶதைர்யச்ச தத்ஃபலம் மாத்ந்நே ॥
நூற்றுக்கணக்கான முறை ஸேதுஸ்நாநம்‌ செய்வதாலும்‌, பத்தாயிரமுறை காஶீயாத்திரை செய்வதாலும்‌, ஆறுமுறை பூமியை வலம்‌ வருவதாலும்‌ எந்த பலன்கள்‌ உண்டோ, அவை ஒருமுறை தாயை வணங்குவதால்‌ ஏற்படும்‌.
यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च ।
तानि सर्वाणि नश्यन्तु प्रदक्षिणपदे पदे ।।
யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தரக்தாநி ச ।
தாநி ஸர்வாணி நஶ்யந்து ப்ரக்ஷிணபதேதே
நான்‌ இந்தப்‌ பிறவியிலும்‌ முந்தைய பிறவிகளிலும்‌ செய்த குற்றங்கள்‌ அதனால்‌ விளைந்த பாபங்கள்‌, துன்பங்கள்‌ யாவும்‌ எனது ஒவ்வொரு ப்ரதக்ஷிணத்தாலும்‌ நஸித்துப்‌ போகட்டும்‌.
ॐ नमः पित्रे जन्मदात्रे सवेदेवमयाय च ।
सुखदाय प्रसन्नाय सुप्रीताय महात्मने ।।
ஓம் நம: பித்ரே ஜந்மதாத்ரே ஸவேதேவமயாய ச ।
ஸுதாய ப்ரஸந்நாய ஸுப்ரீதாய மஹாத்மநே ॥
அனைத்துத்‌ தெய்வங்களின்‌ வடிவானவரும்‌, ப்ரஸன்னராயும்‌, ப்ரீதியுடையவராகவும்‌, ஸுகத்தைத்‌ தருபவரும்‌ மஹாத்மாவுமாகிய, எனக்கு ஜந்மத்தை (பிறவியை)த்‌ தந்த தந்தைக்கு நமஸ்காரம்‌.
नमः सदाऽऽशुतोषाय शिवरूपाय ते नमः ।
सदाऽपराध क्षमिणे सुखाय सुखदाय च ।।
நம: ஸதா(அ)(அ)ஶுதோஷாய ஶிவரூபாய தே நம: ।
தா(அ)பரா க்ஷமிணே ஸுகாய ஸுதாய ச ॥
எப்பொழுதும்‌ எளிதில்‌ திருப்தியடைபவருக்கு நமஸ்காரம்‌. மங்களகரமான ரூபமுடையவருக்கு நமஸ்காரம்‌. எப்பொழுதும்‌ குற்றங்களைப்‌ பொறுத்துக்‌ கொள்பவராகவும்‌, ஸுகமாகவும்‌, ஸுகத்தைத்‌ தருபவராகவும்‌ இருப்பவர்க்கு நமஸ்காரம்‌.
दुर्लभं मानुषमिदं येन लब्धं मया वपुः ।
संभावनीयं धमर्थिं तस्मै पित्रे नमो नमः ।
துர்லம் மாநுஷமிம் யேந லப்ம் மயா வபு: ।
ஸம்பாவநீயம் மர்திம் தஸ்மை பித்ரே நமோ நம: ।
எவரால்‌ வழங்கப்பட்டு அரிதான இந்த மனித ஸரீரம்‌ தர்மத்தின்‌ பொருட்டு என்னால்‌ அடையப்பட்டதோ, அந்த பிதாவுக்கு எனது நமஸ்காரம்‌.
मातापितृचरणकमलेभ्यो नमः|| மாதாபித்சரணகமலேப்யோ நம:॥
अनन्तकोटि-प्रदक्षिण-नमस्कारान्‌ समर्पयामि।
அநந்தகோடி-ப்ரதக்ஷிண- நமஸ்காராந்‌ ஸமர்ப்பயாமி।
आशीर्वादः - ஆஸீர்வாத:
தாய்‌ தந்தையர்‌ சொல்ல வேண்டியது
उत्तिष्ठोत्तिष्ठ धर्मज्ञ धर्मस्त्वामभिरक्षतु ।
प्रीतौ स्वस्तव शौचेन दीर्घमायुरवाप्नुहि ।
गतिमिष्टां तपो ज्ञानं मेधां च परमां गतः ।।
உத்திஷ்டோத்திஷ் ர்மஜ்ஞ ர்மஸ்த்வாமபிரக்ஷது ।
ப்ரீதௌ ஸ்வஸ்தவ ஶௌசேந தீர்மாயுரவாப்நுஹி ।
திமிஷ்டாம் தபோ ஜ்ஞாநம் மேதாம் ச பரமாம் த: ॥
(மஹாபாரதம்‌ : 3 - 2147-9)
ஓ! அறிந்தவனே எழு. நீதி (தர்மம்‌) உன்னைக்‌ காக்கட்டும்‌; உனது பக்தியினால்‌ நாங்கள்‌ உன்னிடம்‌ மிகவும்‌ திருப்தியாக இருக்கிறோம்; நீண்ட வாழ்நாள்‌, ஞானம்‌, உயர்ந்த புத்தி, உனது விருப்பங்களின்‌ நிறைவேற்றம்‌ ஆகியவை உனக்கு அருளப்படட்டும்‌.
सत्पुत्रेण त्वया पुत्र नित्यं काले सुपूजितौ ।
सुखमेव बसावोऽत्र देवलोकगताविव ।।
ஸத்புத்ரேண த்வயா புத்ர நித்யம் காலே ஸுபூஜிதௌ ।
ஸுமேவ ஸாவோ(அ)த்ர தேவலோகதாவிவ ॥
(மஹாபாரதம்‌ : 3 - 217 - 10)
நீ கடமையுணர்ச்சி கொண்ட நல்ல மகன்‌. நாங்கள்‌ நியாயமாகவும்‌, தொடர்ச்சியாகவும்‌ (தேவலோகத்தில்‌ வசிப்பவர்களைப்‌ போன்று) உன்னால்‌ நன்கு பார்த்துக்‌ (கவனித்துக்‌) கொள்ளப்படுகிறோம்‌.
न तेऽन्यदैवतं किंचिद्दैवतेष्वपि वर्तते ।
प्रयतसत्वाद् द्विजातीनां दमेनासि समन्वितः ॥
ந தே(அ)ந்யதைவதம் கிஞ்சித்தைவதேஷ்வபி வர்ததே ।
ப்ரயதஸத்வாத் த்விஜாதீநாம் மேநாஸி ஸமந்வித: ॥
(மஹாபாரதம்‌ : 3 - 217 - 11)
தேவர்களில்‌ கூட உனக்கு (எங்களைத்‌ தவிர) வேறு ஒரு தேவன்‌ தேவையில்லை. தொடர்ந்து உன்னை நெறிப்படுத்திக்‌ கொண்டு, அந்தணர்களின்‌ சுயக்கட்டுப்பாட்டை நீ அடைந்திருக்கிறாய்‌.
पितुः पितामहा ये च तथेव प्रपितामहाः ।
प्रीतास्ते सततं पुत्र दमेनावां च पूजया ॥
பிது: பிதாமஹா யே ச ததேவ ப்ரபிதாமஹா: ।
ப்ரீதாஸ்தே ஸததம் புத்ர மேநாவாம் ச பூஜயா ॥
(மஹாபாரதம்‌ : 3 - 217- 12)
எங்களிடம்‌ நீ கொண்டிருக்கும்‌ பக்தியையும்‌, சுயக்கட்டுப்பாட்டையும்‌, அறங்களையும்‌ கண்டு உனது முப்பாட்டன்களும்‌, மூதாதையர்களும்‌ தொடர்ந்து உன்னிடம்‌ திருப்தியாகவே இருக்கின்றனர்‌.
मनसा कर्मणा वाचा शुश्रूषा नैव हीयते ।
न चान्या हि तथा बुद्धिर्दृश्यते साप्रतं तव ।।
மநஸா கர்மணா வாசா ஶுஶ்ரூஷா நைவ ஹீயதே ।
ந சாந்யா ஹி ததா புத்திர்த்ஶ்யதே ஸாப்ரதம் தவ ॥
(மஹாபாரதம்‌ : 3 - 217 - 13)
எண்ணத்தாலும்‌, சொல்லாலும்‌, செயலாலும்‌, எங்களைக்‌ கவனிப்பதில்‌ நீ எப்போதும்‌ தடுமாறியதில்லை. உனது மனதில்‌ (எங்களை எப்படித்‌ திருப்தி செய்வது என்பதைத்‌ தவிர) இப்போது வேறு எண்ணமே இல்லை என்று தெரிகிறது.
जामदग्न्येन रामेण यथा वृद्धौ सुपूजितौ ।
तथा त्वया कृतंसर्वं तद्विशिष्टं च पुत्रक ।।
ஜாமக்ந்யேந ராமேண யதா வ்த்தௌ ஸுபூஜிதௌ ।
தா த்வயா க்தம்ஸர்வம் தத்விஶிஷ்டம் ச புத்ரக ॥
(மஹாபாரதம்‌ : 3 - 217 - 14)
ஜமதக்னியின்‌ மகன்‌ ராமன்‌ (பரசுராமன்‌) தனது வயது முதிர்ந்த பெற்றோரைச்‌ சேவித்தது போலவும்‌ அதற்கு மேலும்‌, ஓ! மகனே, நீ எங்களைச்‌ சேவிக்கிறாய்‌.
समर्पणम्‌ - ஸமர்ப்பணம்
येन प्रीणाति पितरं तेन प्रीतः प्रजापतिः ।
प्रीणाति मातरं येन पृथिवी तेन पूजिता ।।
யேந ப்ரீணாதி பிதரம் தேந ப்ரீத: ப்ரஜாபதி: ।
ப்ரீணாதி மாதரம் யேந ப்திவீ தேந பூஜிதா ॥
எவனால்‌ தந்தை திருப்தியடைகிறானோ அவனால்‌ ப்ரஜாபதி திருப்தியடைகிறார்‌. எவனால்‌ தாய்‌ திருப்தியடைகிறாளோ அவனால்‌ பூமித்தாய்‌ பூஜிக்கப்பட்டவளாகிறாள்‌.
जानुनी च करौ यस्य पित्रोः प्रणमतः शिरः ।
निपतन्ति पृथिव्यां च सोऽक्षयं लभते दिवम्‌ ।।
ஜாநுநீ ச கரௌ யஸ்ய பித்ரோ: ப்ரணமத: ஶிர: ।
நிபதந்தி ப்திவ்யாம் ச ஸோ(அ)க்ஷயம் லதே திவம் ॥
தாய்‌ தந்தையரை வணங்குவதால்‌ எவருடைய கரங்களும்‌, முழங்கால்களும்‌, தலையும்‌ பூமியில்‌ விழுகின்றனவோ, அவன்‌ அழிவற்ற ஸ்வர்கத்தை அடைகிறான்‌.
மாத்ரு-பித்ரு வந்தநம்‌
தாய்‌-தந்தை வழிபாடு


தொகுத்தவர்‌:
ப்ரஹ்மசாரீ ஸநாதந சைதந்ய


வெளியீடு
ஸ்ரீப்ரஜ்ஞா பப்ளிகேஷன்ஸ்‌
வேதாந்த சாஸ்த்ர ப்ரசார ட்ரஸ்ட்‌.
சத்திரப்பட்டி ரோடு, வேதபுரீ, தேனி-625 531.
email: swamiomkarananda@gmail.com
vedaneri.org Phone: 04546-253908